Friday, January 30, 2009

அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் 50 வது படம்!



















'யாரு நாற்காலியை யாரு பிடுங்குவாங்களோ' என்ற அதிகபட்ச அலர்ஜியோடுதான் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். இதில் லேட்டஸ்டாக சிக்கிக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

அஜீத்தின் 50 வது படத்தை இயக்க இவர் அட்வான்சே வாங்கிவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், 'காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் தள்ளிட்டு போன' கதையாக, அஜீத்தின் 50 வது படத்தை இயக்க முருகதாஸ் வந்துவிட்டார்! காத்திருந்த வெங்கட் பிரபு கலகலத்து போயிருக்கிறாராம்.

இந்தி கஜினியும் பெரும் ஹிட் ஆன சந்தோஷத்திலிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து அவருக்கு பாலிவுட்டிலிருந்தே பலமான அழைப்புகள். ஷாருக்கானிலிருந்து, சல்மான்கான் வரை ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவருக்குமே உடனே முருகதாஸ் படத்தில் நடிக்க இயலாதபடி முந்தைய கமிட்மென்டுகள்!

இந்த இடைவெளியில் ஒரு தமிழ் படத்தை இயக்கிவிடலாம் என்று யோசித்த முருகதாஸ், அஜீத்திடம் கதை சொல்லியிருக்கிறாராம். இதில் நடிக்க அஜீத் சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைகிற படம் அஜீத்தின் 50 வது படமாக இருக்க வேண்டும் என்பதும் முருகதாசின் விருப்பம். தினா படத்தின் மூலம் அஜீத்திற்கு 'தல' என்கிற அந்தஸ்த்தை வழங்கிய முருகதாஸ் கேட்டால் முடியாதென்றா சொல்லப் போகிறார் 'தல'?

No comments: